இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்பு விடுத்தோம். அதில் 10 பேர் மட்டுமே அமெரிக்கா வருவதாக விருப்பம் தெரிவித்தனர். மற்றவர்கள் இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள். சிலர் நிச்சயமற்ற தன்மையில் இருந்தனர். இந்தியாவில் இன்னும் 24,000 அமெரிக்கர்களை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.