கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வருகின்றது. அந்த வகையில், கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 444 பேர் டில்லியில் இருந்து மெல்போர்னுக்கு சிறப்பு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். அதேபோல், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து செல்ல அந்நாட்டு வெளியுறவுத்துறை சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. சிறப்பு விமானங்கள் மூலமாக இதுவரை 50 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டதாக அதிபர் டிரம்பும் தெரிவித்திருந்தார்.
இந்தியாவிலேயே இருக்க விரும்பும் அமெரிக்கர்கள்